Tue. Jul 1st, 2025

பாரத் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சிஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இங்கு 150 க்கும் மேற்பட்டலாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகவும், இதில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் இருந்து 15% வாடகையை குறைத்து நிர்ணயம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 7 நாளாக ஈடுபட்டு வந்தனர். தற்போது டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பாரத் பெட்ரோலிய முனையக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர்

இதனால் வழக்கம் போல் பெட்ரோல் டேங்கர் லாரிகள் ஓட தொடங்கியது

Related Post