Mon. Jun 30th, 2025

பொன்னேரியில் 7 ம் நாள் ஜமாபந்தியில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில்,ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி மற்றும் திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது

இதில் பொன்னேரி உள் வட்டம் சோம்பட்டு பரணம் வீடு கிளிக்கோடி ஏலியம்பேடு திருப்பூர் கனகவல்லிபுரம் கூடுவாஞ்சேரி சின்னக்காவளம் ஆலாடு காட்டாவூர் தடப்பெரும்பாக்கம் பொன்னேரி திருப்பாலைவனம் உள்ள வட்டம் பழவேற்காடு கரிமணல் பாக்கம் கணவன் துறை சிருலப்பாக்கம் அவுரிவாக்கம் திருப்பாலைவனம் உள்ளிட்ட பொதுமக்கள் பட்டா மற்றும் இதர குறைகளுக்கான மனுக்கள் அளித்தனர்

பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், துணை வட்டாட்சியர் பாரதி வருவாய் ஆய்வாளர்கள் பிரேம், வேல்முருகன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post