நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத் அருகே உள்ள நெய்விளையை சேர்ந்த மாயாண்டி மகன் சதீஷ் (24). டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் பிள்ளைவிளையை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முத்துக்குமாரிடம்(33) சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,000 கடன் வாங்கியுள்ளார். கொடுத்த கடனை திரும்ப தரக்கோரி முத்துக்குமார் சதீஷிடம் பலமுறை கேட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்துவந்த சதீஷ் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 25 ம் தேதி மாலை பிள்ளையன்மனை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சதீஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷை வழிமறித்து கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த சதீஷ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் எஸ்ஐ சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் வனசுந்தர் விசாரணை நடத்தி டிரைவரை அரிவாளால் வெட்டி காயப்படுத்திய பிள்ளைவிளையை சேர்ந்த முத்துக்குமார், காபிரியேல் மகன் லியோன்ராஜ்(29) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக பலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655