மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நடுவங்களுக்கு பெட்ரோல், டீசலும், இதேபோன்று விமான நிலையங்களுக்கு உயர்தர பெட்ரோல் கொண்டு செல்லும் பணியில் 5 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் அந்த இரண்டு ஆண்டுகளை கால நீடிப்பு செய்ய வேண்டும் என டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர், அதன் அடிப்படையில் இடைப்பட்ட ஓர் ஆண்டு மட்டுமே நீட்டிப்பு செய்யப்பட்டது
இந்த நிலையில் திடீரென பாரத் பெட்ரோலிய நிறுவனம் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்கு முன்பாக புதிய ஒப்பந்தம் அறிவித்துள்ளதோடு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பெட்ரோல் டேங்கர் லாரி வாடகையை திடீரென 15 சதவீதம் குறைத்து விட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட பழைய ஒப்பந்தத்தின் படி வாடகையை வழங்க கோரி கடந்த இரண்டு நாட்கள் டேங்கர் லாரிகளை இயக்காமல் அதன் உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போதியிலும் பெட்ரோலிய நிறுவனம் அவர்களது கோரிக்கையை ஏற்காததால் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
இதனால் பெட்ரோல் கலன் சரக்குந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன, இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு விமான நிலையங்களுக்கு உயர்த்தர பெட்ரோல் கொண்டு செல்லும் பணியும் முடங்கி உள்ளது
இதனால் தரைவழி போக்குவரத்து மட்டும் இன்றி எரிபொருள் தட்டுப்பாட்டால் விமான சேவையும் பாதிக்கக்கூடும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்,
இதனிடையே இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பாரத் பெட்ரோலிய நிறுவனம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வாடகை ஒப்பந்தம் தொடர்பாக உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்