Tue. Aug 26th, 2025

பேய்க்குளம் அருகே மீரான்குளம் கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம் – முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா மூன்று லட்சம் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அறிவிப்பு

கோயம்புத்தூர் துடியலூரைச் சேர்ந்தவர் மோசஸ் (55). இவரது மனைவி வசந்தா (50) மற்றும் உறவினர்களான ரவி கோவில் பிச்சை (60) இவரது மனைவி கிறிஸ்ட்டியா கிருபா (50), பெரிசோன் (29) இவரது மனைவி சைனி பிரபா (26) இந்த தம்பதியின் குழந்தை ஸ்டாலின் (2), ஜெனிட்டா (26) ஆகிய 8பேர் கோவையில் இருந்து ஒரு ஆம்னி காரில் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வந்து கொண்டிருந்தனர்.

வீடியோ

வீடியோ

வீடியோ

சாத்தான்குளம் அருகே வரும்போது இந்த கார் சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த விபத்துக்குள்ளானது. இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா ரவி, கோவில் பிச்சை, அவரது மனைவி கிருத்திகா கிருபா, மற்றும் இரண்டு வயது குழந்தை ஸ்டாலின் ஆக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் தப்பினார்கள்.

வீடியோ

இதுகுறித்து தகவல் அறிஞ்சதும் சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 5பேரின் உடல்களை மீட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் இறந்த குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிவாரண நிதியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

Related Post