நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் நடந்த அசன விருந்து நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் 112 வது ஆண்டு அசன சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது.
பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமை வகித்தார். பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் நவராஜ் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் .
இதில் நாசரேத், பிரகாசபுரம், மணிநகர், மாதாவனம், மூக்குப்பீறி, ஞானராஜ் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆலயத்தில் நற்கருணை ஆசீர் நடந்தது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் இறை மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655