ஸ்ரீவைகுண்டம் பணிமனை அதிமுக பொறுப்பாளர் கண் தானம் செய்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டி வாழ்த்தினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தவகையில், தூத்துக்குடி மண்டல அதிமுக அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனை செயலாளர் மாரியப்பன் கண் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரம் வழங்கியுள்ளார். இதற்கான உறுதிமொழி பத்திரத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாரியப்பன் கொடுத்து முறைப்படி பதிவு செய்துள்ளார்.
கண் தானத்திற்கு உறுதிமொழி பத்திரம் வழங்கிய மாரியப்பனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ். பி. சண்முகநாதன் பாராட்டி வாழ்த்தினார்.
இதில், அண்ணா போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் மண்டல தலைவர் எட்வர்டு அந்தோணிராஜ், துணை செயலாளர் ஜேசுபாதம் தாவீதுராஜா, ஸ்ரீவை பணிமனை தலைவர் லட்சுமணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், ஆழ்வை விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.