தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளராக செயல்பட்டு வருபவர் R. கோபால கிருஷ்ணன் அவர்கள்.
இவர் வருவாய்த்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பலமுறை விருது பெற்றுள்ளார்.
தற்போது இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியானது, இப்படி ஒரு மனிதரா என அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
அப்படி வியக்கத்தக்க வகையில் இவர் செய்த செயல் தான் என்ன? அதைப்பற்றி பார்ப்போமா…
சாத்தான்குளம் வட்டம் அரசூர் பஞ்சாயத்தை சேர்ந்த ராஜகுமார் ரோஸ்லின் தம்பதியர். இதில் ராஜகுமார் அவர்களுக்கு இருதய ஆபரேஷன் அவசரமாக செய்ய வேண்டியது இருந்ததால் தனது நிலத்தை விற்றாவது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நிலத்தை விற்க முயற்சி செய்யும்பொழுது அந்த நிலம் காலி மனை நத்தமாக இருந்துள்ளது. ஆதலால் அந்த காலி மனை நத்தமிடத்தை வரைமுறை பட்டாவாக மாற்ற சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து அந்த மனு துறை சார்ந்த விசாரணை முடித்து தாசில்தார் அவர்கள் பரிந்துரை மூலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இவர்கள் அங்கிருந்து வர கொஞ்சம் காலதாமதம் ஆனதால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திர்க்கு சென்றுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் அங்கு சென்று விசாரிக்கும் பொழுது அதில் சிறு தவறு உள்ளதால் திருப்பி அனுப்ப உள்ளோம் என்று என்று கூறியுள்ளார்கள்.
அப்பொழுது கணவன் மனைவியான ராஜகுமார் ரோஸ்லின் அவர்கள் ஆப்ரேஷன் பண்ண வேண்டிய அவசரத்தை எண்ணி அந்த இடத்தில் நின்று என்ன செய்வோம் கடவுளே என்று ஆதங்கமாக கூறியுள்ளனர்.
இதை அருகில் நின்று கேட்ட திருச்செந்தூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இவர்கள் யாரென்றே தெரியாமல்
“ஏன் நீங்கள் கண்கலங்கி நிற்கின்றீர்கள். உங்களுக்கு இருதய பிரச்சனை இருக்கிறதா உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமா அப்படி என்றால் என்னிடம் ஒரு 10 பவுன் நகை வீட்டில் சும்மா தான் இருக்கிறது உங்களுக்கு நான் அந்த 10 பவுன் நகை தருகிறேன்”
நீங்கள் இந்த நிலத்தை சரி செய்து வித்த உடன் எனக்கு தந்தால் போதும் என்று திருச்செந்தூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூறியவுடன் இவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு இப்படி ஒரு மனிதாபமிக்க மனிதரா. என்று அவரைக் கையெடுத்து கும்பிட்டுள்ளனர்
இன்னும் ஐந்து நாளில் பட்டா வேலை நடக்கவில்லை என்றால் நாங்கள் உங்களிடம் வாங்குகிறோம் சார் என்று அந்த ஆபிஸருடைய முகத்தை பார்த்துக்கொண்டே வெளியே வந்துள்ளனர்.
இப்படியும் உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று வியந்து அந்த குடும்பத்தார் அவர்களோடு கூட சென்ற சாத்தான்குளம் பகுதி மக்களின் நீர் வாழ்வாதாரத்திற்காக போராடிய சிவனேசன் என்பவர் அந்த ஆபிஸர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் நற்செயலை இன்று 10 பவுன் 8 லட்சத்துக்கு சமம் ஆனால் ஒருஉயிர் அதைவிட மதிப்பு மிக்கது என்பதை உணர்ந்த அந்த ஆபிசர் தனது தங்கத்தை தருகிறேன் என்று சொன்னதை பார்த்து வியந்து கோபாலகிருஷ்ணன். ஆபிஸரை பாராட்டினார்
வருவாய்த்துறை அலுவலரில் வித்தியாசமாக செயல்படும் மனிதநேயமிக்க நல்ல மனிதர் வட்டாட்சியர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டினர்
மக்களோடு மக்களாக புன்னகை தேசமும் இணைந்து வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அவர்களைமனதார வாழ்த்துகிறோம்…