மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர் சங்க ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது
பொதுக்குழு கூட்டத்தில் குருவானவர் தேவராஜ் ஞானசிங் தொடக்க ஜெபம் செய்தார். சங்க துணைச் செயலர் ஜட்சன் வரவேற்புரை ஆற்றினார்.
பழைய மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங் தலைமைஉரை ஆற்றினார்.
இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன்,
பென்ஹோம் நிறுவனர் ஜாண் தேவதாசன், நெய்வேலி நிலக்கரி நிறுவன முன்னாள் தலைமைப் பொறியாளர் சுப்பையா,மேஜர் ஜெனரல் பானி வின்சென்ட், வெயிட் லிப்டிங் பன்னாட்டு நடுவர் ஆதம்பாக்கம் தியாகராஜன், மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவக் கல்லூரி மாணவர் ஜெயப்பிரகாஷ்.க்கு சங்கம் சார்பில் 10000 ஊக்கத் தொகை வழங்கப் பட்டது.
இவ்விழாவில் மேல்நிலைப் பள்ளியில் 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வில் முதலாம் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக காலையில் பூப்பந்தாட்ட போட்டி கைப்பந்தாட்ட போட்டி இறகு பந்து போட்டி கால்பந்தாட்ட போட்டி ஆகியவை நடந்தன.
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கால்பந்து மற்றும் பூப்பந்து போட்டி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சங்கச் செயலர் ஜட்சன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சங்க தலைவர் ரூபன் துரைசிங் தலைமையில் துணைத் தலைவர் சித்தர் ராஜா செயலாளர் ஜட்சன். பொருளாளர் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் இணைச்செயலாளர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் ஜெய்சன் சாமுவேல் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்
94 87 44 56 55