தமிழ்மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் SDR விஜயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்தவர்

1982ம் ஆண்டு டிசம்பர் 23ம்தேதி மறைந்தார். அவர் நினைவாக தூத்துக்குடி போல்டன்புரத்தில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்படி சிலை உடைந்து சேதமடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்
மேலும் அரசு சார்பில் தியாகி கக்கன் பூங்காவின் உள்பகுதியில் கக்கன் அவர்களின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மத்திய மாவட்ட த.மா.கா தலைவர் SDR விஜயசீலன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
ந. பாலசுப்ரமணியன்,
நிருபர், தூத்துக்குடி