நாசரேத் அருகே உள்ள டி கே சி நகரில் ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
நாசரேத் மாதவனத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் அமல்ராஜ் (47) என்பவர் சாத்தான்குளத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் நாசரேத் சென்று கொண்டிருந்த போது டிகேசி நகர் அருகே வரும்போது சாத்தான்குளத்திலிருந்து சென்னைக்கு சென்ற SPS டிராவல்ஸ் ஆம்னி பேருந்தானது இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் பலத்த காயமடைந்தார்
உடனடியாக அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளான அமல்ராஜ் என்பவர் இறந்து விட்டார்
மேற்படி இறந்த நபரின் உடல் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில் உள்ளது.
விபத்தை உண்டாக்கிய ஆம்னி பேருந்து ஓட்டுநர் தர்மபுரியை சேர்ந்த மாதேஸ் குமார் என்பவர் மகன் பிரேம்குமார் (21) கைது செய்யப்பட்டார்
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகராஜ் அவர்கள் விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.