ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நாட்டின் 80வது ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமான சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவிற்கு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார்.
மத்திய அரசு வழக்கறிஞர் முத்துராமலிங்கம் சுதந்திர தினத்தின் சிறப்புகள், இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
நீதிபதிகள் தரணிதர், ராமசங்கரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில், வழக்கறிஞர்கள் ரகுநாத், பெருமாள்பிரபு, பாலசுப்பிரமணியன், சங்கரலிங்கம், பசும்பொன்ராஜ், ஆனந்த், சிவா, ராம்கி, ஜோதிப்ரியா, ஷாலினி, சிவசங்கரி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


