Mon. Jun 30th, 2025

தெய்வச்செயல் புரத்தில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

தெய்வச்செயல்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவினை பா.ஜ.க., வினர் புஷ்பாஞ்சலியுடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க.,விற்குட்பட்ட கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழா தெய்வச்செயல்புரத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் பேச்சி, சீனிவாசன், வெங்கடேஷன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கருங்குளம் ஒன்றிய தலைவர் நங்கமுத்து பாஜ கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னதாக வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபு தலைமையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஒன்றிய நிர்வாகிகள் விநாயகர்பெருமாள், சொரிமுத்து, மாரியப்பன், சுனில், பிரவீன், கந்தசாமி, சாமிநாதன், சிவசண்முகம், மாரிமுத்து, சிலம்பரசன், ராபின், ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post