Mon. Jun 30th, 2025

சாத்தான்குளத்தில் முப்பெரும் விழா

சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை மற்றும் நட்சத்திர அரிமா சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நடைபெற்றது

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, கிறிஸ்மஸ் விழா, மற்றும் புத்தாண்டு விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகர் திரு.பிரம்மநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அரிமா சங்க நிர்வாகிகள் ஆர்.ஜெயபிரகாஷ், வி .எஸ். முருகேசன், ஆர் எஸ் எஸ் ராஜமோகன், எஸ் தங்கபாண்டி, சி.நோபுள் ராஜ் பி.றி.ஏ. இராமகிருஷ்ணன் நந்தகுமார், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி மன்றத் தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய், துணைத் தலைவர் மாரியம்மாள், அரசு சித்த மருத்துவர் டாக்டர் ரமணி, அறக்கட்டளைக் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி அசோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

நிகில் சிறப்பு பள்ளி முதல்வர் மருத்துவர் லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். செட்கோ இயக்குனர் எஃப் எக்ஸ் ஆர் ஜார்ஜ், தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனுடையோர் முன்னேற்ற சங்கத் தலைவர் பேர்சில், தலைமைக் காவலர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நீரோடை அறக்கட்டளை தலைவர் பாஸ்டர் பால் ஆபிரகாம், வர்த்தக சங்க செயலாளர் மருத்துவர், மதுரம் செல்வராஜ், அட்வகேட் வேணுகோபால், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் ராஜேஷ், சீட்ஸ் மகளிர் அணி செயலாளர் சுகந்தி பேர்சில் மானா உதவும் கரங்கள் தலைவர் பரமசிவன், வெல்னஸ் பயிற்சியாளர்கள் சௌந்தர்யா, பேச்சியப்பன், முத்துலட்சுமி, வர்த்தக சங்கத் தலைவர் அப்பு கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கத்தின் சார்பாக சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் புத்தாண்டு பட்டாசுகள் இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிறப்புப் பள்ளி குழந்தைகளின் கண்கவர் நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மிக்கேல் சிறப்புப் பள்ளி தாளாளர் சுசீலா மிக்கேல் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகா பால் துரை தொகுத்து வழங்கினார்.

Related Post