
ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க புதிய தலைவராக கருப்பசாமி, செயலாளராக வெங்கிடாச்சாரி, துணைத் தலைவராக துரைசதீஷ், இணைச் செயலாளராக செல்லத்தாய், பொருளாளராக அமிர்தவல்லி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் ஜனவரி 2ம் தேதி பொறுப்பேற்கின்றனர்.
புதிய நிர்வாகிகளை வழக்கறிஞர்கள் ஆறுமுகப்பெருமாள், பீஸ்ராஜன், ஜெயசிங் மதுரம், பெருமாள் பிரபு, சங்கரலிங்கம், முத்துராமலிங்கம், கணேசன், ராகவன், ஜெயராஜ், குணசேகரன், தெய்வக்கண்ணன், தனேஷ் பாலமுருகன், கருப்பசாமி, சரவணன், ஆனந்த், தனலெட்சுமி, மாரிஜெயந்தி, ஈஸ்வரி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்தினர்.