எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாசரேத் பஸ் நிலையம் அருகே திமுக வினர் மறியலில் ஈடுபட்டனர். நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். நகர அவை தலைவர் கருத்தையா, பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், கவுன்சிலர் சாமுவேல், ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜெரின் உள்பட 19 பேர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 19 பேரை நாசரேத் போலீசார் கைது செய்து நாசரேத் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


