spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

ஸ்ரீவை.யில் திமுகவினர் மறியல் போராட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலினை அரசுக்கு எதிராக பேசியதாக கூறி தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர்.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய திமுகவினர் ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் கொம்பையா, ஸ்ரீவை நகர செயலாளர் சுப்புராஜ் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் நான்குமுனை சந்திப்பில் இன்று (செவ்வாய்கிழமை) திடீர் மறியல் போராட்டம் செய்தனர்.

அப்போது, தவெக தலைவர் விஜய் மற்றும் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மறியல் செய்த மாவட்ட பிரதிநிதிகள் அருண்கிருஷ்ணன், சின்னபாண்டி, மாரிமுத்து, மாணவரணி பொறுப்பாளர் பொன்இசக்கி, கவுன்சிலர் சாலமோன், முன்னாள் டவுன் பஞ். தலைவர் கந்தசிவசுப்பு, ஒன்றிய துணை செயலாளர் முருகன், பொருளாளர் கருப்பசாமி, வக்கீல் சங்கரன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்