நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.
நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார்.
வாசகர் வட்டத்துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இலக்கிய செம்மல் சங்கரலிங்கம் காலத்தின் விளைச்சல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராஜன், எழுத்தாளர் மணிமொழிச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில் தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெபசிங் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மனோகரன். மந்திரம்.மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.


