தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள அகப்பைகுளம் அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 475 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 6 சபைமன்றங்களில் 126 சேகரங்களில் ஆலயத்தை சுத்தப்படுத்தி ஆலயத்தை பராமரிக்கின்ற குடும்பமாக பணிசெய்கின்ற பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளவர்களிடம் பெறப்பட்ட குருவானவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 475 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது
ஆரம்ப ஜெபத்தை சேகரத்தலைவர் பாஸ்கரன் செய்தார்கள். பாடல்கள் அகப்பைக்குளம் அந்திரேயா பாடகர் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். 126 சேகரங்களிலிருந்து 475 சபைகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் ஆலய பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் வரவேற்றார்கள்.
குருத்துவசெயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்பு வாழ்த்து செய்தியை வழங்கினார்கள்.
உபதலைவர் தமிழ்செல்வன் திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ் வாழ்த்துச்செய்தியை வழங்கினார்கள்
ஆலய பரிபாலன கமிட்டி அங்கத்தனர்கள் சேகர கமிற்றி அங்கத்தினர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளை சேகர பொருளாளர் ஸ்டிபன் ஞானதுரை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ் தொகுத்து வழங்கினார்கள்.
பங்கு பெற்றவர்கள் சபை மனறங்களிலுள்ள சேகரங்கள் வாரியாக அழைக்கப்பட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் கேக் வழங்கப்பட்டது.
அனைத்து குருமார்க்களுக்ம்
கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கிய குடும்பங்களுக்கும் விழா ஏற்பாடுகளை செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், பரிபாலன பொருளாளர் திரு P பொன்ராஜ் மற்றும் அனைத்து கமிட்டி உறுப்பினர்களுக்கும் சேகர தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்கள்
இறுதியில் குருத்துவசெயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்புஜெபத்தை ஏறேடுக்க உபதலைவர் தமிழ்செல்வன் ஆசி கூறினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகப்பைக்குளம் சேகரத்தலைவர் பாஸ்கரன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ் பொருளாளர் ஸ்டிபன் ஞானதுரை ஆலயபரிபாலன பொருளாளர் பொன்ராஜ் செயலர் செல்லத்துரை மற்றும் குழுவினர் செய்திருந்தனர்
த ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்