பழனியப்பபுரத்தை சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு சொந்தமான கிணறு பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே உள்ளது.

மேற்படி பாழடைந்த கிணற்றில் மயில் முட்டை எடுப்பதற்காக பழனியப்பபுரத்தை சேர்ந்த செல்வ குமார் (வயது-31) என்பவர் இன்று (10.12.2024) மாலையில் கிணற்றில் இறங்கிய போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்ட நிலையில் தண்ணீருக்குள் வெளியே வர முடியாமல் மூழ்கி இறந்துவிட்டார்.

மகன் கிணற்று தண்ணீருக்குள் விழுந்தது அறிந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது தந்தை பால்பாண்டி (வயது 63), தம்பி தினேஷ்குமார் (வயது 28) என்பவரும் கிணற்றுக்குள் இறங்கி செல்வகுமாரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

மேற்படி இருவரும் கிணற்றுக்குள் இறங்கிய இருவரும் வெளிவர முடியாமல் சுவரை பிடித்துக் கொண்டு இருந்தநிலையில் சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.

தினேஷ்குமார் என்பவருக்கு கல்குத்தியதில் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் பேய்க்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

செல்வகுமார் என்பவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டள்ளது.
மேற்படி நபர் செல்வகுமார் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் இசக்கி, சிறப்பு நிலைய அலுவலர் ஹேரிஸ் தாமஸ் செல்வ பாபு, சுரேஷ்குமார், மாரிமுத்து பிரவின் சாமுவேல், முத்து மாரியப்பன் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். துரிதமாக செயல்பட்டு வாலிபர் உடலை மீட்டு, கிணற்றுக்குள் இறங்கிய இருவரையும் காப்பாற்றிய தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது