Tue. Jul 1st, 2025

நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது

நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் மற்றும் மாநில தலைவர் கர்ணன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் செய்துங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சந்திப்பில் டிச.1ம் தேதி மள்ளர் பேராயம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செந்தில்ராஜன் என்பவர் நேதாஜி சுபாஷ் குறித்தும் முத்துராமலிங்க தேவர் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் செந்தில் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு
காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மள்ளர் பேராயம் அமைப்பை சேர்ந்த செந்தில்ராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலியில் இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி மாவட்ட எல்கையான செய்துங்கநல்லூரில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ், மாநில தலைவர் கர்ணன் மற்றும் நிர்வாகிகளான திண்டுக்கல் ஜெயராமன், நல்லமுத்து, நெல்லை பாலு,மோகன், சக்கரவர்த்தி, காளிமுத்து , மாவட்ட பொது செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம். மாநில மாணவரணி செயலாளர்
கொம்பையா பாண்டியன்,
சப்பாணி முத்து, சுப்பிரமணியன்.
சில்வர் பாண்டியன்,
சிவராம் கார்த்திக்,மாதவன் பாண்டியன்,
இரா.ஹரிஹரன்,சகாயம்
சுடலைகண்ணு,கில்லி மணி.கீழநத்தம் முத்து.மகேஷ்,அம்பை பேச்சிமுத்து,ராஜகோபால்,சின்ன முத்துராமலிங்கம், செல்வம், தேவா, செல்வம், சுரேஷ்.
அருணா, குமார், பெரியதுரை, முத்துராமலிங்கம், சேதுபதி, அல்லாத்தபாண்டி,
கோபால், ஆழ்வார் மணி, மகாராஜன் உள்பட 500 கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் இன்று திருநெல்வேலி மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதையும் மீறி இன்று ஆர்ப்பாட்டத்திற்கு சென்றோம். அப்போது காவல்துறை எங்களை கைது செய்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் கூறினார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும், கொண்டையன்கோட்டை மறவர்களையும் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாங்கள் இன்று திருநெல்வேலியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட சென்றோம். ஆனால் காவல்துறை எங்களை கைது செய்துள்ளது.

அடுத்த கட்டமாக தவறாக பேசியவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம் என்றார்.

….

Related Post