Tue. Jul 1st, 2025

கொங்கராயக்குறிச்சி – கருங்குளம் பைபாஸ் சாலை சந்திப்பில் ரவுன்டானா அமைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்


கொங்கராயக்குறிச்சி – கருங்குளம் பைபாஸ் ரோடு சந்திப்புகளில் ரவுன்டானா அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயகுறிச்சி கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கொங்கராயக்குறிச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் இம்ரான் தலைமை வகித்தார். கொங்கராயக்குறிச்சி கிளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் நாகூர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் மன்சூர் வரவேற்றார்.

கூட்டத்தில், மாநில பேச்சாளர்கள் மசூத் உஸ்மானி ”இப்ராஹிம் நபியின் கொள்கைகளும் அதன் உறுதியும்” என்ற தலைப்பிலும், அபுபக்கர் சித்திக் ”இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து கூட்டத்தில், கொங்கராயக்குறிச்சி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் அனைத்துதரப்பு மக்கள், மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை மின்வாரியத்தினர் தடுத்து தடையில்லாத வகையில் சீரான மின்விநியோகம் செய்திடவேண்டும், கொங்கராயக்குறிச்சியில் இருந்து கருங்குளம் ஆற்றுப்பாலம் வழியாக நெல்லை சந்திப்பிற்கு புதியதாக கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருங்குளம் – கொங்கராயக்குறிச்சி வழியாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்வழித்தட புறவழிச் சாலையில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் இருபுறமும் நான்குமுனை சந்திப்பில் ரவுன்டானாவும், உயர்கோபுர மின்விளக்குகளும் அமைத்திடவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்ட பொருளாளர் ரஷீத்காமில், துணைச்செயலாளர் அஸார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post