



நாசரேத் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் இல்லத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு வழங்கும் விழா நடைபெற்றது.
பிரகாசபுரம் பங்குத்தந்தை அருட்பணி. சலேட் ஜெரால்ட் அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெர்வின் தூத்துக்குடி ஜெகன் மற்றும் நாசரேத் 3வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ் முன்னிலை வகித்தனர்.
ஆர்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் இருதய ஞான ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு 95 மாணவ மாணவியருக்கு புத்தாடை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சகாய ரூபன் தொழிலதிபர் எஸ் டி ஆர் சாமுவேல் மற்றும் விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணராஜ், மரியின் ஊழியர் சபை அருட் சகோதரிகள் ஹெலன் மற்றும் இன்ஃபெண்டா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அன்னை தெரசா தொண்டு நிறுவன செயலாளர் காட்வின் அலெக்ஸ் ராஜா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவனத் தலைவர் அந்தோணி ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.