
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்திருமறையூர் சேகரம் மறுரூப ஆலயத்தில் அறுப்புக்கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது. அறுப்பின் பண்டிகை ஆராதனையில் பாட்டக்கரை சேகர தலைவர் ஜெபஸ் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு தேவ செய்தி கொடுத்தார். சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஆராதனை நடத்தினார். ஆராதனையில் காணிக்கையாக படைக்கப்பட்ட பொருட்கள் ஆராதனை நிறைவு பெற்ற பின்பு ஏலம் விடப்பட்டது. இவ்வாராதனையில் சபை ஊழியர் ஜான்சன் ஸ்டான்லி துரை ஆலய பணியாளர் ஆபிரகாம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால், தேவதாஸ். செயலர் ஜான்சேகர் பொருளாளர் அகஸ்டின், பாடகர் குழு தலைவர் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான திருச்சபையார் பங்கு பெற்றனர். இ பண்டிகை காண ஏற்பாடுகளை சபை உறுப்பினர்களோடு சேகர தலைவர் ஜான்சாமுவேல் செய்திருந்தார்.
ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை
தேசம்
நாசரேத் -
நிருபர்
செல். 9487445655