தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் கனோன் ஆர்தர் மர்க்காஷியஸ் சபைமன்ற ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்துமஸ் கீத ஆராதனை தூய திரித்துவ ஆலயம் ஒய்யான்குடியில் வைத்து நடைபெற்றது.

ஆரம்ப ஜெபத்தை நாசரேத் சபைமன்றத்தலைவர் வெல்ற்றன் செய்தார்கள். 24 சேகரங்களிலிருந்தும் 80 சபைகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் ஒய்யான்குடி சேகரத்தலைவர் ரூபன் மணிராஜ் வரவேற்றார்கள்.
குருத்துவசெயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்பு வாழ்த்து செய்தியை வழங்கினார்.
மேல்நிலைப்பள்ளி மேலாளர் பிரேம்குமார்ராஜசிங் வாழ்த்துச்செய்தியை வழங்கினார்
திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளை திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க செயலர் ராபின்சன் தொகுத்து வழங்கினார்.
பங்கு பெற்றவர்கள் சேகரங்கள் சபை வாரியாக பாடல் பாடினர், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது. நிறைவு ஜெபம் மற்றும் ஆசியை நாசரேத் சேகர தலைவர் ஹென்றி ஜீவானந்தம் செய்தார்.
நிகழ்ச்சியில் திருமண்டல சுற்றுச்சூழல் துறை செயலர் ஜாண்சாமுவேல், திருமண்டல தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன், ஆசீர்சாமுவேல், கமல்சன்,வேதநாயகம் மற்றும் அனைத்து சேகரகுருக்கள் பங்குபெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒய்யான்குடி சேகரத்தலைவர் ரூபன் மணிராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பர்னபாஸ் மற்றும் குழுவினர் செய்திருந்னர்