Sun. Jun 29th, 2025

சாத்தான்குளம் அருகே நூலகத்தில் இந்திய அரசமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.


சாத்தான்குளம் அருகே கிளை நூலகத்தில் இந்திய அரசமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை கிளை நூலகத்தில் இந்திய தேசத்தின் 75 வது ” இந்திய அரசமைப்பு தினம்” கடைபிடிக்கப்பட்டது.

நூலக வாசகர் வட்டத் தலைவரும் புரவலருமான இருதயராஜ் தலைமை வகித்தார். நூலக ஆர்வலர்கள் வாசகர்கள், அசின்குமார், பாலமுருகன், முத்துதுரை, தனசேகரன், முருகன், அமலதாசன், நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் ஆகியோர் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Post