Mon. Jun 30th, 2025

பூதப்பாண்டி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

பூதப்பாண்டி அருகே உள்ள தடிகாரன்கோணத்தை சேர்ந்த 45 வயதான மணி குட்டன் என்பவர் காளிகேசம் பகுதியில் ஹோட்டல் நடத்திவரும் தம்பதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மகளை மணி குட்டன் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

உடனே அந்த மாணவி கூச்சலிட்டபடியே வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார்.

பள்ளி மாணவியை மணிகுட்டன் மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சித்தது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் மணி குட்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நிருபர், M. வசந்த்
அகத்தீஸ்வரம்

Related Post