சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இளைஞர்கள் மத்தியில் புகையிலை பொருள்கள் பயன்பாடு முற்றிலுமாக இல்லாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் ஆகியோர் உத்தரவின் பேரில் றிஎப்ஒய்பி 2.0 எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக கொம்மடிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மகேஷ்குமார் வரவேற்று பேசினார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து டாக்டர் ஐலின் சுமதி தலைமை வகித்து பேசினார். புகைப்பிடித்தல் தடுப்பு சட்டம் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் பேசினார். சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஏராளமான மாணவ மாணவியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் இணைச்செயலாளர் காசியானந்தன், கல்லூரியின் முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, இளம்செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.