சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு.,வினர், 200 பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவதாக கூறி, போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருப்பூர், குமரன் சிலை முன்பு துவங்கி, தபால் அலுவலகம் வரை சி.ஐ.டி.யு.,வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பேசினார். சாம்சங் நிறுவன தயாரிப்பு மொபைல் போன்களை, சாலையில் போட்டு உடைத்தனர். அதன்பின், 200 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்..
திருப்பூர் நிருபர்
V. முத்துப்பாண்டி