🌹புன்னகை தேசம் நிருபர், வசந்த், அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதை கண்டித்து, அனைத்து வியாபாரிகளும் வியாபாரத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுமார் 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் மீன்,காய்கறிகள் விற்பனை செய்து வருவதாகவும், சந்தை உள்ள இடத்தினை பற்றி தவறான தகவல்கள் தெரிவித்து வியாபாரிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சிப்பதாக கூறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து இருளப்பபுரம் சந்தை வியாபாரிகளை அகற்ற முயற்சித்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது