சாத்தான்குளம், ஜன.31:
சாத்தான்குளம் பேரூராட்சி,சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது..
முகாமுக்கு பேரூராட்சிசெயல் அலுவலர் உஷா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார்.சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள்பெற்றார். இதில் முதியோர், மகளிர் உரிமைத்தொகை,பட்டா மாறுதல், புதிய ரேசன் அட்டை கேட்டு என்பன உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. இதில் மொத்தம் 500க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் சமுக பாதுகாப்புதிட்ட தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், வருவாய் ஆய்வாளர் பிரசியா, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்சிராணி,இந்திரா, லிங்கபாண்டி, ஜோசப் அலெக்ஸ், நகர திமுக துணை செயலர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிசரவணன், உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை, மின்வாரியதுறை மற்றும் அரசு த்துறை அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
