Sun. Jun 29th, 2025

சாத்தான்குளத்தில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 31

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறைப் பேராசிரியையுமான முனைவர் மீனாட்சி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் கலைவாணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஐ. சிவமீனா, பி. கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அரசின் சட்டங்களையும், உரிமைகளையும், நுகர்வோரின் கடமைகளையும் எடுத்துரைத்தனர். கல்லூரியின் மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கிருஷ்ணவேணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Post