Tue. Sep 17th, 2024

பேய்க்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்க புன்னகை தேசம் கட்சி  கோரிக்கை

மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர் வடிந்தோடிய நிலையில், குளத்து பாசன பயிர்களுக்கு விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் உள்ளது.

மணிமுத்தாறு கால்வாய் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், 4 வது ரீச் பாசன கால்வாயின் கடைமடை பகுதி குளங்களான கருங்கடல், கட்டாரிமங்கலம், பனைக்குளம், இளமால்குளம், புளியங்குளம் இன்னும் பல ஊர் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளதாகவும், மேற்படி குளங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என புன்னகை தேசம் கட்சியின் மாவட்ட தலைவர் ஜான்சன் பொன் சேகர் அவர்கள் சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்கள் சார்பாக சாத்தான்குளம் வட்ட வழங்கல்  அலுவலர் பிரபு அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

கோரிக்கை மனுவில் மணிமுத்தாறு கால்வாய் மூன்றாவது நாலாவது ரிச் பாசன கால்வாய் மற்றும் குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post