மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடந்தது.
விழாவிற்கு, கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் வழக்கறிஞர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வரதவிஜயன் வரவேற்றார்.
பெங்களுர் மார்கன் ஸ்டான்லி நிறுவன மேலாளர் பென்ஸ்டீவர்ட் இன்ஜினீயரிங் துறையில் சாதனை படைப்பதற்கான வழிமுறைகள், அதற்கான திட்டமிடல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக இணைப்பு தலைவர் சைலஸ் சற்குணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஹோலிகிராஸ் கல்லூரியில் பயின்று வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்த இளம் பொறியாளர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தமது குடும்பத்தினருடன் வந்து பட்டங்களை பெற்று மகிழ்ந்தனர்.
2020-24ம் வருடத்தில் பயின்ற 90சதவீத மாணவர்கள் இந்த வருட பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
இதில், பிரியா பிரகாஷ் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.