நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி டிஆர்டி சின்ஹா உத்தரவின் பேரில்
என்சிசி தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தினுடைய கருத்துப் பொருளாக “ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு
நடத்தப்பப்ட்ட யோகாசன நிகழ்ச்சிகளை பள்ளியின் மேல்நிலைப் பிரிவு உதவி தலைமையாசிரியர் மெரிட்டன் சகரியா துவக்கி வைத்தார்.
உயர்நிலைப் பிரிவு உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் தனபால் மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்தார்.
மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களும், மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற வகுப்பு மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு யோகாசனம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர்
பிரபாகர்,தலைமையாசிரியர் குணசீலராஜ், ஜூனியர் கமிஷன் அதிகாரி சுபேதார் சுந்தரபாண்டியன், கம்பெனி ஹவில்தார் மேஜர் சதிஷ்குமார், ஹவில்தார்கள் சுராஜ் மற்றும் சுந்தர், உடற்கல்வி இயக்குனர் ஜெபசிங் கால்டுவெல், மற்றும் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.
தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் நன்றி கூறினார்.
சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655