மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர் பிரிவு 9 வது பட்டாலியனில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது
மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் பாளையங்கோட்டை கிளையின் ஆராய்ச்சி அலுவலர் மருத்துவர் ஹரிஹர மகாதேவன் யோகாவின் பயன்கள் குறித்து சிறப்புரை வழங்கினார்.
பட்டாலியன் கமாண்டர், கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கினார். அவரது தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
அரசு சித்த மருத்துவ கல்லூரியின் சித்தர் யோக மருத்துவ பிரிவின் பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஜெர்பின் மற்றும் சக்தி யோகா பயிற்சி வழங்கினார்கள்.