திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாதுரை, அவரது மனைவி சாந்தி (100) இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ள நிலையில் இவரது கணவர் அப்பாதுரை மற்றும் மகன் சத்தியமூர்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர்

இதனால் மூதாட்டி சாந்தி தனது 4 வது மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார் மூதாட்டியான சாந்திக்கு 24 பேரன் பேத்திகள்24 கொள்ளு பேரன் பேத்திகள் 8 எள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்
இந்நிலையில் மூதாட்டி சாந்தி இவரது நூறாவது பிறந்தநாள் விழாவை தனது பேரன் திருமண விழாவில் வைத்து தனது மகள் மற்றும் பேரன் கொள்ளு பேரன் கொள்ளு பேரனின் குழந்தைகளுடன் தனியார் திருமண மண்டபத்தில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து மற்றும் உறவினருடன் கொண்டாடினார்

இதுகுறித்து மூதாட்டியின் மகள் லட்சுமி தெரிவித்ததாவது சிறு வயதில் அம்மா கேழ்வரகு கூழ், மீன் குழம்பு சாப்பாடு, கஞ்சி சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாகவும் தற்போது பால், கேழ்வரகு கூழ் பழைய சாத கஞ்சி, சாப்பிட்டு வருவதாகவும் அம்மாவின் துணியை வேறு யாரும் துவைக்க விடாமல் அவர்களே துவைத்து வருவதாகவும் துணியை மாடியில் தானே காய வைப்பதாகவும்,தினமும் வீட்டை சுற்றி பல முறை நடப்பதாகவும் காலை மாலையில் மாடிப்படியில் பல தடவை நடப்பதாகவும் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் தினமும் சாமி கும்பிட்டு வருவதாகவும் வயதான காலத்திலும் உழைத்து சாப்பிட வேண்டுமென வீட்டின் அருகிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும் வீட்டின் முன்பு பெருக்கி சாணி தெளித்து வருவதாகவும் அவர்களுடைய வேலையை யாரும் செய்வதில்லை எனவும் நல்ல முறையில் காது கேட்பதாகவும் அனைத்து பேரன் பேத்திகள் பெயர் சொல்லி அழைத்து பாசத்துடன் நடந்து கொள்வதாகவும் குடும்பத்துடன் 100 வது பிறந்தநாளை கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்