Sun. Jun 29th, 2025

அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கல்

நாசரேத்தில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இந்த நாசரேத் கிளையில் நாசரேத் அருகே உள்ள திருக்களூர் _ கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(31) வாடிக்கையாளராக இருந்தார்.

இவர் பிரதம மந்திரி காப்பீடு திட்டமான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தில் காப்பீடு செய்திருந்தார். இந்தக் காப்பீடு திட்டத்தில் வாரிசுதாரராக தாயார் லட்சுமி நியமனம் செய்யப்பட்டிருந்தார். முத்துகிருஷ்ணன் கடந்த 28 03_2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனைத் தொடர்ந்து அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் முத்துகிருஷ்ணன் வாரிசுதாரரான தாயார் லட்சுமிக்கு அதன்படி காப்பீடு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை வழங்க வங்கி கிளை முடிவு செய்தது.

இதையடுத்து அவரது சொந்த ஊரான திருக்களூர் கக்கன்ஜி நகரில் உள்ள முத்து கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று வங்கி ஊழியர்கள் தாயார் லட்சுமியிடம் காப்பீடு தொகை ரூ2லட்சத்துக்கான காசோலை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முருகேசன் கலந்து கொண்டு அரசு உயிர் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றி அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார்‌.

இதில் தமிழ் நாடு கிராம வங்கி நாசரேத் கிளை மேலாளர் நிறைமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வேதா, டிவிஎஸ் வட்டார உதவியாளர்கள் அருள் ராமேஸ்வரி, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post