திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வேலு, வசந்தா தலைமையில் நடைபெற்றது

இதில் வளர்மதி, மணிமுத்து, கனிமொழி கௌசல்யா,, ஜனனி, ரம்யா,மீனா, இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மீஞ்சூர்பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பிரதிநிதி அலெக்ஸாண்டர், வரவேற்புரையாற்றினார்
சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி தனி வட்டாட்சியர் சித்ரா முன்னாள் நகர மன்ற தலைவர் மோகன்ராஜ் காங்கிரஸ் நகர தலைவர் அன்பரசு, ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறி பெற்றோர்களுக்கும் கல்வி முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கருணாகரன், உதயா வினோத் பாபு சேகர், கபிர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் சமூக ஆர்வலர் குரு சாலமோன் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடைஅணிவித்து மரியாதை செலுத்தி ஊக்கத்தொகைவழங்கி அறுசுவை உணவு வழங்கப்பட்டது
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்