Mon. Jun 30th, 2025

சென்னையில் லாரி மோதி நாசரேத்தை சேர்ந்த டிரைவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுடலை (40), சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (45) இருவரும் டிரைவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லுருக்கு மீன்லாரியில் இறால் மற்றும் மீன் ஏற்றிக்கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி அடுத்த பஞ்செட்டி அருகில் இன்று காலை 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்த முன்னாள் சென்ற லாரியில் பின்பக்கம் மோதியதில் மீன் லாரியில் முன்பக்கம் படுத்திருந்த நாசரேத்தை சேர்ந்த டிரைவர் சுடலை (45) என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்

அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனர் நல்ல தம்பியை மீட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த வந்த கவரப்பேட்டை போலீசார் சுடலையின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர் இறந்த சுடலைக்கு 2 பெண் 1ஆண் பிள்ளைகள் உள்ளன இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post