திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அம்பேத்கர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து 21கிலோ கஞ்சா, 3 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அருகில் உள்ள கிடங்கில் இருந்து கடத்தி வந்ததாக கூறியதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மேலும் 3.5டன் குட்கா பொருட்களை கைப்பற்றினர்.
ஒரே நேரத்தில் 21கிலோ கஞ்சா, 6.5 டன் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்காவை கடத்தி வந்த மணிகண்டன், கோயில்ராஜ், ராமச்சந்திரன், பொன்னுசாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சட்டவிரோதமாக கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சோழவரம் போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை வருகின்றனர்.
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்