சாத்தான்குளம் வட்டம் பழனியப்பபுரத்திலிருந்து ஶ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் சோலார் கம்பெனிக்கு அருகில் இரவு 9 மணி அளவில் புதுக்குளம் ஊரைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் இசக்கி முத்து (24) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பேய்க்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முத்து ரமேஷ் ஒட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இசக்கிமுத்துவிற்கு முகம் மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது முத்துரமேஷ் என்பவருக்கு கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி நபர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.