Tue. Aug 26th, 2025

சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் சாலையில் லாரி மோதி விபத்து

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த வந்த லாரி மோதியது

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமின்றி உயிர்த் தப்பினர்.

இச்சாலையில் கனரக டாரஸ் லாரி இயக்குபவர்கள் அதிவேகமாக செல்வதுடன் அலைபேசி உபயோகித்து செல்வதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

எனவேச்சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும் எனவும், அதிவேகமாக அலைபேசி உபயோகித்துக் கொண்டு செல்லும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Post