திருநெல்வேலி பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது
கூட்டத்திற்கு பள்ளி தவைமை ஆசிரியர் திரு சாத்ராக் ஞானதாஸ் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திரு சுதர்சன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் 175வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் 2025 மே மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக 175 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதற்கான டீ ஷர்ட் மற்றும் காபி கப் வெளியிடப்பட்டது.
பள்ளியின் தாளாளார் வெளியிட டாக்டர் ராமசுப்ரமணியன், டாக்டர் அந்தோணி ராஜ், தொழிலதிபர் கமலேஷ், ஆடிட்டர் ராமசாமி, அலுமினி சங்க தலைவர் இம்மானுவேல் விஜயகுமார், பொருளாளர் கென்னடி, சங்க இணைச் செயலாளர் டியூக் துரைராஜ் மற்றும் தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.