நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை வகித்து வரவேற்றார்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் புனித லூக்கா சமுதாய கல்லூரி தாளாளர் செல்வின், நகர காங்கிரஸ் தலைவர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கால்டுவெல், உதவி தலைமை ஆசிரியர்கள் மெரிட்டன் சகரிராஜ், நேசகுமார் துரைசிங், ஆசிரியர்கள் ஜெயந்தி சுபாசினி, ஜெய்சன் சாமுவேல், ஆபிரகாம் இம்மானுவேல், கிங்ஸ்டன் ஜோசுவா, செல்வம் ஜோசப், எட்வின், ஜோனா ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


