Tue. Jul 1st, 2025

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் எட்டாவது தேசிய சித்த மருத்துவ விழா

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் எட்டாவது தேசிய சித்த மருத்துவ விழா மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை மருத்துவர் ஆத்திகுமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி
விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மருத்துவர்கள் கிருஷ்ணா தர்மராஜ், சண்முகப்பிரியா, சூர்யா, ஈஸ்வர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் டாக்டர் வைகுண்டமணி அவர்கள் சித்த மருத்துவத்தை சுகாதாரத்தின் முக்கிய நிகழ்வில் ஒன்றிணைப்பதற்காகவும் சித்த மருத்துவத்தின் தனித்திறனை பயன்படுத்துவதற்காகவும், சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கொண்டாடப்படுகிறது என்றார்.

மேலும் அகத்தியரின் தாரக மந்திரமான மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் அதாவது மனம் நமக்கு வசமானால் இந்த அகில உலகமும் நமக்கு வசமாகி ஆயுள் காலத்தை நீட்டிக்கலாம் என்றும்
தற்காலத்தில் பெண்களுக்கு கருப்பைத் தசைக் கட்டிகள், நார்த்திசுக்கட்டிகள் கட்டிகள், நீர்கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவேரியன் சின்ட்றோம்) வளரிளம் பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதையும் அதைத் தடுப்பதற்கான உணவு முறைகள் பற்றியும், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புரதச்சத்து நிறைந்த பஞ்சமுட்டி கஞ்சி பற்றியும், ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அஞ்சரை பெட்டி பற்றியும், நவதானியங்கள் வெறும் பூசைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டுமல்ல அதில் உடலுக்கு தேவையான அனைத்து கனிமங்களும், தொற்றா நோய்களுக்கான சர்க்கரைநோய், அதிகுருதி அழுத்தம், இதய நோய்களுக்கு அதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் இருப்பதால் அதுவே அவர்களுக்கான சிறந்த உணவு என்றும், மழைக்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும் மூலிகைகள் பற்றியும், கூந்தல் வளர் மூலிகைகள் பற்றியும், எலும்பை வலுவாக்கும் உணவு முறைகள் பற்றியும், பெண்களுக்கான அழகு குறிப்புகள் பற்றியும் தெளிவாக மருத்துவரால் விளக்கம் தரப்பட்டு காட்சியகவும் படுத்தப்பட்டது.

விழா முடிவில் உளுந்தங்கஞ்சி, கேப்பை கூழ்,
எள்ளுருண்டை நெல்லிக்காய், கடலை மிட்டாய் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாட்டினை சித்த மருத்துவ மருந்தாளுனர் சங்கரமணி செய்திருந்தார். இதில் பயிற்சி மருத்துவர் ஐஸ்வர்யா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Post