Tue. Jul 1st, 2025

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலன் புதுக்குளம் குடும்பத்தோடு மக்கள் காத்திருப்பு போராட்டம் –  குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தில் வேலன் புதுக்குளம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது

கல்குவாரிகளால் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் போது இப்பகுதி பொதுமக்கள் புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என ஏற்கனவே பல்வேறு தரப்பிலிருந்து மனுக்கள் கொடுத்தும்,  போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் இன்று சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்களை சந்தித்து வட்டாட்சியர் அவர்களிடம் புதிய கல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என மனு கொடுப்பதற்காகவும், தங்களுடைய குடும்ப அட்டைகளை திரும்ப வட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கவும் வேலன் புதுக்குளம் ஊர் பொதுமக்கள் காலையிலிருந்து காத்திருந்து வருகின்றனர்

சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்கள் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்

இதனால் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Related Post