
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.என்.எஸ்) சார்பில் உலக மண் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 58 மற்றும் 160 ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரத்னகுமாரி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியை சோபியா வரவேற்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச் சூழல் கரிசனைத் துறையின் இயக்குநர் ஜான் சாமுவேல் மண் வளம் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினார்.
கருத்தரங்கில் திருச்செங்கோடு கே.எஸ். ராமசாமி தொழில்நுட்பக் கல்லூரி உணவுத் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பிலிப் ராபின்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிறைவாக நாட்டுப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ஷெர்லின் ராஜா நன்றியுரையாற்றினார்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் கல்லூரித் தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆலோசனையின் பேரில் முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரத்னகுமாரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஷெர்லின் ராஜா, மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
த.ஞான ராஜ் கிறிஸ்டோபர் புன்னகை தேசம், நாசரேத் நிருபர்