மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாநாடு தண்டுபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரபுரம் செட்டிவிளை கிராம். இந்த ஊருக்கு குதிரை மொழி ஊராட்சி புங்கம்மாள்புரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய் பைப் லைன் வழியாக தண்ணீர் கொண்டுவந்து இந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடிரென இந்த ஊருக்கு தண்ணீர் வரும் பைப் லைனில் இருந்து கூடுதலாக பைப் லைன் அமைத்து தண்டுபத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நேற்று பஞ்சாயத்து துணைத் தலைவர் சுயம்பு தலைமையில் (28-11-24) ஜேசிபி இயந்திரம் மூலமாக குழி தோண்டி பைப் லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்தது.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் தலைமையில் சிதம்பரம் செட்டிவிளை பொதுமக்கள் திரண்டனர்
தண்டுபத்து கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான், பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த பகுதி மக்கள் எங்கள் ஊருக்கு கடந்த ஏழு ஆண்டுகளா கூட்டு குடிநீரான ஆற்று தண்ணீர் வரவில்லை. புங்கம்மாள்புரத்தில் இருந்து வரும் தண்ணீரை வைத்து தான் எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இந்த தண்ணீர் இந்த சுற்றுவட்டார் பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு செல்கிறது இந்த நிலையில் இங்கிருந்து கூடுதலாக பைப்பு மூலமாக தண்டு பத்துக்கு கொண்டு சென்றால் எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே தனியாக போர் போட்டு ஒரு பைப் லைன் அமைத்து தண்டுபத்திற்கு கொண்டு செல்லுங்கள் இதிலிருந்து எடுக்கக் கூடாது என்று கூறினர்.
தொடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட ஜேசிபி விடுவிக்கப்பட்டது.