


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளித் தலைமையாசிரியர் எஸ்தர் மெர்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிவகுமார் வரவேற்றுப்பேசினார்.
புதுக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமேனன் அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளர் சாமுவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்
கல்வி ,விளையாட்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
கணித பட்டதாரி ஆசிரியர் ஏஞ்சலா நன்றி கூறினார்.
ஊர் பொதுமக்கள் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்