தூத்துக்குடியில் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார், சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கணேஷ் புகையிலை பாக்கெட்டை கையில் வைத்திருந்த சிறுவனை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் பெங்களுரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூபால்ராயரபுரம் 5வது தெரு செபஸ்தியன் மகன் ராஜா (42), தாளமுத்துநகர், சமீர்வியாஸ் நகர் மரிய இன்னாசி மகன் சுரேஷ் (40), பூபால்ராயர்புரம் 4வது தெரு பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (26), கோவில்பிள்ளை விளை ஜான் ஜேசுவா எபனேசர் (32), ஆரோக்கியபுரம் ஐயர்விளை பால்துரை மகன் சுந்தர்ரராஜ் (42) ஆகிய 5பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள 132 கிலோ புகையிலை பொருட்கள், ஸ்கார்பியோ கார், எலக்ட்ரீக் பைக், சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.